இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று முக்கிய பேச்சுவார்த்தை

ஜம்மு-காஷ்மீர், பஹல்காமில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததையடுத்து பாகிஸ்தானில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஓப்பரேஷன் சிந்தூர் என்று இந்திய இராணுவம் பெயரிட்டது.

இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *