ஆளும் கட்சியை வீழ்த்தும் முனைப்புடன்: எதிர்க்கட்சிகளின் கூட்டணி

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணி, சில உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்தற்கு, பொதுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் (12.06.2025) கூட்டு எதிர்க்கட்சி, இந்த முடிவை அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் “திஸ்ஸ அத்தநாயக்க”, ஐக்கிய தேசிய கட்சியின் “தலதா அதுகோரல”, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் “லசந்த அழகியவன்ன” மற்றும் பொதுஜன பெரமுனவின் “சாகர காரியவசம்” ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான திட்டங்களையும், அந்த கூட்டணி கோடிட்டுக் காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெறுவதுடன் மட்டும், தங்கள் ஒத்துழைப்பு முடிவடையாது, தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து, தமது கூட்டு பணியாற்றும் என்று அவர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவித்த போது கலந்துகொண்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *