நுவரெலியாவில் இ.தொ.கா பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது.

சந்திப்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராளய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன் போது இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இ.தொ.காவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *